Bookstruck

46. சென்னை வருகை

Share on WhatsApp Share on Telegram
« PreviousChapter ListNext »

 

 

←← 45. தாக்ஷிணாத்ய கலாநிதிப் பட்டம்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்46. சென்னை வருகை

47. நான் ஆசிரியரை அடைந்தது →→

 

 

 

 

 


440033தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 46. சென்னை வருகைகி. வா. ஜகந்நாதன்

 

 


சென்னை வருகை


சில காலமாக ஆசிரியருக்கு உடல் நலம் சரியில்லாமையில்லாமையால் சிதம்பரம் கல்லூரிப் பணியை விட்டுவிட்டுப் போகவேண்டுமென்ற எண்ணம் இருந்து வந்தது. வயிற்றில் அடிக்கடி வலி உண்டாயிற்று. உணவு ஜீரணம் ஆகவில்லை. எனவே, கல்லூரியிலிருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை செட்டியாருக்குத் தெரிவித்தார். அவர், "அந்தப் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்று தோன்றுகிறதோ அவரை நியமித்துவிட்டு, உங்கள் விருப்பப்படி செய்யலாம்" என்று தெரிவித்தார். தமக்கு அடுத்தபடி மீனாட்சி கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொன்னோதுவார் என்பவரை முதல்வராக நியமிக்க ஏற்பாடு செய்துவிட்டு ஆசிரியர் அங்கிருந்து விலகிக்கொண்டார்.
 

 

 


 

« PreviousChapter ListNext »